தேனி மாவட்டம், வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா. இவரது கணவரின் மூலம் அறிமுகமான சித்தார்த் கவுதம் என்பவர் அமுதாவின் மகளுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல தவணைகளாக ரூ.4.72 லட்சத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளார். இதுகுறித்து அமுதா தேனி எஸ்.பி இடம் புகார் அளித்தார். எஸ்.பி உத்தரவில் வீரபாண்டி போலீசார் சித்தார்த் கவுதம் மீது நேற்று (ஏப்.26) வழக்கு பதிவு.