மாநில அளவிலான 5நாட்கள் பேட்மிட்டன் போட்டி மயிலாடுதுறையில்

மயிலாடுதுறையில் மாநில அளவிலான பேட்மிட்டன் போட்டி 5நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது 500க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இப்போட்டி நடைபெறுவதை குறிப்பிடத்தக்கது

Update: 2024-09-21 11:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
:- மயிலாடுதுறை மாவட்ட இறகு பந்தாட்டக் கழகம் சார்பில் 13 வயதுக்கு உள்பட்டோருக்கான மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி தொடங்கி வரும் 24-ஆம் தேதி வரை 5 நாள் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த போட்டி முதன்முறையாக நடத்தப்படுகிறது. மயிலாடுதுறை யூனியன் கிளப் வளாகத்தில் இறகுப்பந்தாட்ட கழக மாவட்ட தலைவர் அசோக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, நகராட்சி தலைவர் செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இறகுப்பந்து போட்டிகளை தொடக்கி வைத்தனர். ஐந்து நாள் நடைபெறும் போட்டிகளில் 13 வயதிற்கு உள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆண்கள்  ஒன்றையர், இரட்டையர், மகளிர் ஒன்றையர், இரட்டையர் ஆகிய நான்கு பிரிவுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட உள்ளது. இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு, இறகுப்பந்தாட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடி வருகிறனர்.

Similar News