சோனங்குப்பம்: பெருமாள் கோவிலில் 6 வது நாள் உற்சவம்
சோனங்குப்பம் பெருமாள் கோவிலில் 6 வது நாள் உற்சவம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம் சோனங்குப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலில் 88 ஆம் ஆண்டு மாசிமக திருவிழாவை முன்னிட்டு 6 வது நாள் உற்சாகமாக நேற்று இரவு யானை வாகனத்தில் அம்பாரி சேவையில் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.