அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 6 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து
அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.;
அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 6 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி இன்று 18.08.2025 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் காவல் துறை நடத்திய சோதனையில் பெரம்பலூர் உட்கோட்டம் பெரம்பலூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கணேசன் (59) த/பெ அருணாச்சலம், பாரதிதாசன் நகர், பெரம்பலூர். என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் பெரம்பலூர் காவலர்கள் மேற்படி எதிரியை கைது செய்து அவரிடமிருந்து 1.விமல் பாக்கு (4.425 கிலோ கிராம்) மற்றும் 2.V1-பான் மசாலா (1.650 கிலோ கிராம்) என மொத்தம் 6.075 கிலோ கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து *பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்களால் மேற்படி எதிரியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.