கடந்த ஆண்டு ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 6பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் இன்று திருச்செங்கோடு நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு

ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளை கும்பலில் ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டு, 6பேர் கைது செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது இரண்டு குற்றவாளிகளுக்கு 10 மற்றும் இரண்டு ஆண்டுகள் என 12 ஆண்டுகள் தண்டனையும் மற்றும் 5 பேருக்கு 24 ஆண்டுகள் தண்டனை விதிப்பு;

Update: 2025-10-14 10:53 GMT
நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு கடந்த 27.09.2024-ம் தேதி திருச்சூர் மாவட்ட காவல்துறையிடம் இருந்து, ATM கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகள் வெள்ளை நிற கிரிட்டா கார் மற்றும் ராஜஸ்தான் அல்லது ஹரியானா மாநில பதிவு கொண்ட கண்டெய்னர் லாரியில் வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குமாராபாளையம் காவிரி ஆற்று பாலம் அருகே திருச்செங்கோடு உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள், அன்றைய தினம் சுமார் 9 மணியளவில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த இராஜஸ்தான் மாநில பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியை தடுத்த நிறுத்திய போது வாகன ஒட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக சங்ககிரி நோக்கி ஓட்டினார். இதனால் அந்த வாகனத்தை காவல்துறையினர் பின்தொடர்ந்து விரட்டி சென்றபோது, மேற்கூறிய வாகனமானது சங்ககிரி, சங்ககிரி ரவுண்டானா, வெப்படை 4 ரோடு வழியாக அதிவேகமாக சென்று சாலையில் சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றின் மீது மோதியது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்ற அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற ஆய்வாளர் தவமணி மற்ற போலீசார் உதவியுடன் சன்னியாசிபட்டி அருகே தடுத்து நிறுத்தினார். அதில் இருந்த ஓட்டுநர் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் திருச்சூரில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில் இருந்த நான்கு பேரை ஆய்வாளரின் வண்டியில் ஏற்றியும், லாரியின் ஒட்டுநர் மற்றும் ஒரு காவலரை கண்டெய்னர் வண்டியிலேயே ஏற்றி அந்த வாகனத்தை வெப்படை காவல் நிலையம் நோக்கி கொண்டுவரும்போது கண்டெய்னருக்குள் இருந்து சத்தம் கேட்டதை தொடர்ந்து பின்னால் வந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி தோப்பு காடு என்ற பகுதிக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி, ஓட்டுநரை கண்டெய்னரின் கதவை திறந்து பார்த்தனர். அப்பொழுது அந்த கண்டெய்னருக்குள் இரண்டு நபர்கள் இருந்துள்ளனர். அதில் ஒருவர் பிடிபட்டார். மற்றொருவர் பெரிய பையுடன் (bag) கீழே குதித்து தப்பி ஓடினார். அதே சமயத்தில் கண்டெய்னரை ஓட்டி வந்த வாகன ஓட்டுநர், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணியை தாக்கிவிட்டு பையுடன் ரோட்டிற்கு எதிர்புறம் உள்ள பகுதிக்கு தப்பி ஓடினார். குமாரபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் மல்லசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் தப்பி சென்ற இருவரையும் பின்னால் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். அப்பொழுது லாரியின் ஓட்டுநர் இரும்பு கொக்கியால் உதவி ஆய்வாளரை கடுமையாக தாக்கினார். அப்போது, காவல் ஆய்வாளர் தவமணி தற்காப்புக்காக, தன்னிடம் இருந்த துப்பாக்கியால் ஒட்டுநரை இரண்டு முறை சுட்டுள்ளார். மற்றொரு நபர் பையுடன் தப்பி ஓட முயற்சிக்கும் போது ஆய்வாளர் அவரை சரணடைய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனை பொருட்படுத்தாமல் அவர் ஆய்வாளரை நோக்கி கற்களால் தாக்கியதால், அந்த நபரை கட்டுபடுத்த காவல் ஆய்வாளர் அந்நபரின் காலில் இரண்டுமுறை சுட்டுள்ளார். தற்காப்பிற்காக ஆய்வாளர் சுட்டதில் காயமடைந்த 1) ஜுமாந்தின் ( 2) அசாருதீன் (எ) அஜர் அலி  ஆகிய இருவரும் பள்ளிபாளையம் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஜுமாந்தின் என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். அவரது பிரேதம் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காயமுற்ற முகமது ஹஸ்ரு (எ) அஜர் அலி என்பவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் இதில் காயமடைந்த குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் மல்லசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 1) இர்பான் (32), 2) சவுக்கீன் கான் (23), 3) முகமது இக்ரம் (42), 4) சபீர் (26) மற்றும் 5) முபாரக் (18) ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கைது செய்யப்பட்ட அனைவரும் கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் 27/09/2024 ம் தேதி, அதிகாலையில் நடைபெற்ற ஏடிஎம் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளை சம்பவத்தில் விசாரணையில் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களிடமிருந்து பணம் 67 லட்சத்து 82 ஆயிரத்து 700 ரூபாய் மற்றும் கண்டெய்னர் லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிரிட்டா கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட  குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநில காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களும் வெப்படை காவல் நிலையத்திற்கு விரைந்தனர். வட மாநில ஏடிஎம் கொள்ளையர்களின் என்கவுண்டர் சம்பவத்தால் அப்பகுதியை பெரும் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில் தற்போது திருச்செங்கோடு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டில் நீதிபதி மாலதியின் விசாரணையின் கீழ் வழக்கு வந்துள்ள நிலையில் இன்று மதியம் 12 மணிக்கு மேல் இந்த வழக்கு குறித்த விசாரணை முடிந்து வழக்குக்கான தீர்ப்ப்பினை கூடுதல் மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் மாண்புமிகு நீதிபதிடாக்டர் மாலதி இன்று வழங்கினார். A1 இர்பான் சக்கூர் (32)   S/o சக்கூர் பல்டு, சோப்தா கோயின், பல்லால் மாவட்டம், ஹரியானா மாநிலம். 12 ஆண்டுகள் 5 ஆயிரம் அபராதம் A-2 அசார்அலி (எ) அசுருதீன் (29)  S/oகுப்லா,  439,பீஷ்ரு மேவாட் Dt ஹரியானா  மாநிலம் 12 ஆண்டுகள் 5 ஆயிரம் அபராதம்
இறந்தவர்
A-3 ஜீமான்தீன் (37) த.பெ ஹமீது அன்தொரலா கிராமம், பல்வால் Dt  ஹரியானா மாநிலம்  A-4 ஷபீர்கான் (26) த.பெ லியாகத் அலி. குடாலி கிராமம், பல்வால் மாவட்டம், ஹரியானா மாநிலம். A-5 சௌக்கீன் (26) த.பெ சுபான்ஹான், மலாயி கிராமம், ஹெய்தின் பல்வால் மாவட்டம், ஹரியானா மாநிலம், A-6 முகம்மது இக்ரம் (42) த.பெ அப்துல்ஹமீது, பீஷ்ரூ கிராமம், புலானா தாலுக்கா, நூ மாவட்டம், ஹரியானா மாநிலம். A7 முபாரிக் (25)  s/oஹாரூன், ஹெய்த்தான், பல்வால் மாவட்டம், ஹரியான A4 முதல் A7 வரை 24 ஆண்டுகள் சிறை 3 ஆயிரம் அபராதம் என நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.தண்டனைக்கு உள்ளான அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்

Similar News