கரூர்-பேருந்து டூவீலர் மீது மோதி 7 மாத கர்ப்பமாக இருந்த பெண் உயிரிழப்பு:
கரூர்-பேருந்து டூவீலர் மீது மோதி 7 மாத கர்ப்பமாக இருந்த பெண் உயிரிழப்பு:;
கரூர்-பேருந்து டூவீலர் மீது மோதி 7 மாத கர்ப்பமாக இருந்த பெண் உயிரிழப்பு: கரூர் மாவட்டம், சாலபாளையம் ஜே.ஜே நகர் பகுதி சேர்ந்தவர்கள் நவீன் - ரேணுகா தம்பதியினர். ரேணுகா மணல்மேடு நியாய விலை கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் 7மாதம் கர்ப்பமாக இருந்தார். நேற்று கணவன், மனைவி இருவரும் கரூரில் இருந்து வீட்டிற்கு கோவை சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் தண்ணீர் பந்தல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திமுக முப்பெரும் விழாவை முடித்துவிட்டு சென்ற பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ரேணுகா, நவீன் கீழே விழுந்துள்ளார். இதில் ரேணுகாவிற்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களைபரிசோதனை செய்த மருத்துவர்கள் 7-மாத கர்ப்பமாக இருந்த ரேணுகா அவரது வயிற்றில் இருந்த சிசு உயிரிழந்து விட்டதாக கூறினார். படுகாயம் அடைந்த நவீன் சிகிச்சை பெற்று வருகிறார். திமுக முப்பெரும் விழாவிற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பேருந்து மற்றும் டாட்டா ஏஸ் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அழைத்து வந்த நிலையில் மாநாட்டை முடித்துவிட்டு அதிவேகத்தில் வந்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் கூறினார். சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகியும் அப்பகுதியில் ஒரு போலீசார் கூட வரவில்லை விபத்து ஏற்படுத்திய பேருந்து கண்ணாடிகளை உடைத்தனர். நவீன் மற்றும் ரேணுகாவிற்கு 3- ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் தற்போது தான் ரேணுகா 7- மாத கர்ப்பமாக இருந்தார்.நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.