வாரம் ஐந்து நாள் காலை 7.30மணிக்கு தாம்பரத்திற்கு ரயில்

Update: 2024-10-11 04:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
:- திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இயங்கும் வகையில் மூன்று மாதங்களுக்கு புதிய சிறப்பு இன்டர்சிட்டி ரயிலை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த ரயில் இன்று முதல் சேவையை துவங்கியது. திருச்சியில் இன்று காலை 5.35 மணிக்கு ரயில் புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம் மார்க்கமாக மயிலாடுதுறைக்கு காலை 7.30 மணிக்கு வருகை தந்தது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் முதல் நடைமேடைக்கு வந்த ரயிலுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து ஓட்டுநர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு இந்த ரயில் புறப்பட்டு மயிலாடுதுறை , விழுப்புரம் , மார்க்கமாக தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். தொடர்ந்து தாம்பரத்தில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் , மயிலாடுதுறை வழியாக திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு ரயில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏ.சி. மற்றும் ரிசர்வேஷன் பெட்டிகள் , பொது பேட்டிகள் என இந்த ரயில் வாரத்தில் திங்கள் மற்றும் வியாழன் தவித்து மற்ற நாட்களில் இயக்கப்படும் நிலையில் நிரந்தர ரயிலாக அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News