கரூரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 8-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
கரூரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 8-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.;
கரூரில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 8-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம். வருவாய் துறை சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் மாவட்ட,வட்டத் தலை நகர்களில் ஆர்ப்பாட்டம் இன்று தமிழக முழுவதும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வருவாய் துறை சங்கங்களில் கூட்டமைப்பின் பொறுப்பாளர் சக்திவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட அனைத்து நிலையிலான அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காக்கும் வகையில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடன் நிறைவேற்ற வேண்டும் எனவும், வருவாய்த் துறையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அதீதமான பணி நெருக்கடி ஏற்படுத்துவது தொடர்பாகவும், களப்பணியாளர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, மன அழுத்தத்துடன் பணிபுரிய நிர்பந்தம் செய்வதை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் கைவிட வேண்டும் என வலியுறுத்தியும், வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை அடிப்படையில் நிறைவேற்றிட தமிழக முதலமைச்சர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.