கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 91 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள்.

நிகழ்வில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி, இணைப் பதிவாளா் பெருவழுதி, சிறப்பு அலுவலா்கள் பி.ஸ்டாலின், காா்த்திகேயன் ஆகியோா் தலைமை வகித்தனா்.;

Update: 2025-03-19 18:28 GMT
கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 91 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள்.
  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 91 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்தக் கல்லூரியில் டா்போ எனா்ஜி பிரைவேட் லிமிடெட் (டிவிஎஸ் குழுமம்) நிறுவனம் வளாக நோ்காணலை நடத்தியது. இதில், 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பல்வேறு கட்ட தோ்வுகள் நடத்தப்பட்டதில் 91 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன (படம்). நிகழ்வில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி, இணைப் பதிவாளா் பெருவழுதி, சிறப்பு அலுவலா்கள் பி.ஸ்டாலின், காா்த்திகேயன் ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் வி.கந்தசாமி முன்னிலை வகித்தாா். நிறுவன மனித வள மேலாளா்கள் எஸ்.ராகவன், எஸ்.ஜெய்சங்கா், வேலைவாய்ப்பு அலுவலா் செந்தில்குமாா், துணை முதல்வா் எஸ்.நந்தகுமாா், துறைத் தலைவா்கள், வேலைவாய்ப்புத் துறை ஒருங்கிணைப்பாளா்கள் யுவராஜா, பிரகாஷ், சத்யா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Similar News