100 துளசி மரக்கன்றுகள் நடப்பட்டது
தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் 100 துளசி மரக்கன்றுகள் நடப்பட்டது;

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட 100 துளசி மரக்கன்றுகள் தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் நடும் விழா அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கார்த்திக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வை துவக்கி வைத்தார். நிகழ்வில் திமுக மாநகர பொருளாளர் சரவணன், அர்ச்சகர்கள் ராமமூர்த்தி, ரமேஷ், பத்ரி, மணியம் அரவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.