மார்ச் 28 இல் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம்- PRO அறிவிப்பு.

மார்ச் 28 இல் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம்- PRO;

Update: 2025-03-26 10:29 GMT
  • whatsapp icon
மார்ச் 28 இல் பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம்- PRO அறிவிப்பு.   கரூர் மாவட்டம் புகலூர் ரயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி - ஈரோடு பயணிகள் ரயில், மார்ச் 28 அன்று கரூர் சந்திப்பில் நிறுத்தப்படும்.   இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் சந்திப்புக்கு மட்டுமே இயக்கப்படும். அன்று கரூர் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்புக்கு இயக்கப்படாது.   இதே போல ஈரோடு சந்திப்பிலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் எண்.16845 ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ், மார்ச் 28ல் கரூர் சந்திப்பிலிருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்படும்.  ஈரோடு சந்திப்பிலிருந்து கரூர் சந்திப்புக்கு ரயில் இயக்கப்படாது. அந்த நாளில் கரூர் சந்திப்பிலிருந்து புறப்பட்டு செங்கோட்டை வரை இயங்கும். செங்கோட்டையிலிருந்து காலை 05.10 மணிக்குப் புறப்படும் ரயில் எண்.16846 செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், மார்ச் 28ல் கரூர் ஜங்ஷனில் நிறுத்தப்படும்.  திருச்சிராப்பள்ளி ஜங்ஷனிலிருந்து பிற்பகல் 13.00 மணிக்குப் புறப்படும் ரயில் எண்.16843 திருச்சிராப்பள்ளி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், மார்ச் 28ல் கரூர் ஜங்ஷனில் நிறுத்தப்படும்.  புகளூரில் பணிகள் முடிந்ததும், கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக ரயில் இயக்கப்படும். என செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

Similar News