100 நாள் வேலை தொடங்க வலியுறுத்தி மனு !

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலை தொடங்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மனு அளித்தனர்.

Update: 2024-07-09 12:22 GMT

மனு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலை தொடங்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மனு அளித்தனர். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் 100 நாள் வேலை பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் எரவாஞ்சேரி ஊராட்சியில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள்ஊராட்சி மன்ற தலைவர் ரஜினி தேவி பாலதண்டாயுதம்,ஊராட்சி செயலாளர் மகேந்திரன் ஆகியோரிடம் மனு அளித்தனர். அதேபோல் ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மனுக்கள் அளிக்கப்பட்டது.
Tags:    

Similar News