200 சவரன் நகை கொள்ளை டி.ஐ.ஜி., ஆய்வு

ஆய்வு;

Update: 2025-07-05 03:06 GMT
சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் கேசவவர்மன்,43; இவரது வீட்டிற்கு நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் கேசவவர்மனின் தந்தை முனியன், 70; தாய் பொன்னம்மாள், 65; ஆகியோரை கட்டிப்போட்டு மிரட்டி, வீட்டிலிருந்த 200 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., உமா, கொள்ளை நடந்த கேசவவர்மனின் வீட்டில் நேரில் ஆய்வு செய்தார்.

Similar News