சங்கரன்கோவிலில் பிறந்து 3 நாளான ஆண் சிசு குளத்தில் வீச்சு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிறந்து 3 நாளான ஆண் சிசு குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-01 07:13 GMT
சங்கரன்கோவிலில் பிறந்து 3 நாளான ஆண் சிசு குளத்தில் வீச்சு : பரபரப்பு

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் பாட்டக்குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் கரையில் அந்த வழியாக சென்றவர்கள் துணியில் சுற்றப்பட்ட இறந்த நிலையில் ஆண் சிசு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் அந்த சிசு பிறந்து மூன்றே நாளில் இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. அதனை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த மூன்று நாள் ஆன நிலையில் உள்ள ஆண் சிசு கொலை செய்யப்பட்டு துணியால் சுற்றப்பட்டு வீசி இருந்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பதை பற்றி சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சி மூலம் கல் நெஞ்சம் கொண்டவர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News