4மாதம் சம்பளம் பாக்கி குடிநீர் மின்சார வசதியின்றி தவிப்பு: தமிழக அரசு உதவ வேண்டும் ஊழியர்கள் வேண்டுகோள்
கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையில் 160 பேருக்கு நான்கு மாதம் சம்பளம் பாக்கி குடிநீர் மின்சார வசதியின்றி தவிப்பதால் தமிழக அரசு உதவ வேண்டும் என்று அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். அரசு தவறும் பட்சத்தில் ஆலையை பூட்டிவிட்டு சாவியை ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்;
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளியில் அமைந்த 100 எம் எல் டி கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலையில் 160 பேருக்கு நான்கு மாதம் சம்பளம் பாக்கி குடிநீர் மின்சார வசதியின்றி தவிப்பதால் தமிழக அரசு உதவ வேண்டும் என்று அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். அரசு தவறும் பட்சத்தில் ஆலையை பூட்டிவிட்டு சாவியை ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர் சென்னையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் கடந்த 2010-ம் ஆண்டு ₹600 கோடி செலவில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை தொடங்கப்பட்டது. இங்கிருந்து மணலி, மாதவரம், புழல் உள்ளிட்ட வடசென்னை பகுதிகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இந்த கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் மொத்தம் 5 அலகுகள் உள்ளன. இதில் மொத்தம் 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வந்தது. இதில் 3 அலகுகள் பழுதான நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக 2 அலகுகள் மட்டுமே செயல்பட்டு குடிநீரை உற்பத்தி செய்து வந்தது. இதனால் வடசென்னை பகுதிக்கு ஆலையில் இருந்து குறைவான அளவே கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் முதல் செயல்பட்டு வந்த மற்ற 2 அலகுகளிலும் எந்திரம் பழுதால் தண்ணீர் சுத்திகரிப்பு முழுவதும் நின்று போனது. கடந்த 4 மாதங்களாக அங்கு எந்த பணியும் நடைபெற வில்லை + மேலும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 4 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் இங்கு பணியாற்றிடும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் மேலும் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் காவலாளிகளாக பணியாற்றி வரும் தங்களுக்கு நான்கு மாதங்களாக சம்பளம் வரவில்லை என்றும் தொழிற்சாலையில் மின்சாரம் குடிக்க தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் இன்றி அருகில் காசு கொடுத்து 40 ரூபாய்க்கு கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்துவதாக தெரிவிக்கின்றனர் மேலும் இதே நிலை நீடித்தால் காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீர் ஆக்கும் தொழிற்சாலையில் பூட்டி சாவியை காவல் நிலையத்தில் கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர் பழுதான எந்திரத்தில் மின் மோட்டார் பழுது, கார்பன் பில்டர் மைக்ரோ பில்டர், குழாய் உடைப்பு உளிட்ட பழுதுகளை சரி செய்ய போதிய பொருட்கள் இல்லாமலும் அதனை மாற்ற உடியாக நடவடிக்கை எடுக்காததே தண்ணீர் உற்பத்தி முழுமையாக நின்றதற்கு காரணம் என்று அங்குள்ள ஊழியர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். காட்டுப்பள்ளி கடல்நீராக்கும் ஆலை பழுதால் கடந்த 4 மாதங்களாக வடசென்னை பகுதிக்கு முற்றிலும் அங்கிருந்த குடிநீர் அனுப்பப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனை சமாளிக்கும் வகையில் தற்போது புழல் ஏரியிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் தண்ணீர் தேவை அதிகரிக்கும் போது வடசென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் காட்டுப்பள்ளியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் உள்ள எந்திரங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இங்கு வேலை செய்யும் ஊழியர்கள் 160 பேருக்கும் நிலுவையில் உள்ள சம்பள பாக்கி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தவறும் பட்சத்தில் கடல் நீரை குடிநீராக்கும் தொழிற்சாலைக்குள் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் சாவியை பூட்டி கொடுத்து விட்டு வீட்டுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்றும் வேதனையோடு தெரிவித்தனர்