முதியவரை தாக்கியவர் மீது வழக்கு பதிவு

வெங்கடாசலப்புரத்தில் முதியவரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-01 03:34 GMT

காவல் நிலையம் 

தேனி மாவட்டம் வெங்கடாசலப்புரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி இவர் வீடு நிலம் வாங்கி விற்கும் வேலை செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த ரவி அவரது உறவினர் சேதுராமன் ஆகியோருக்கு பூர்வீக வீட்டை விற்பது தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இந்த நிலையில் சேதுராமனிடம் ராமமூர்த்தி பேசிக்கொண்டிருந்ததை கண்ட ரவி வீடு விற்பனை செய்ய தடையாக இருப்பதாக கூறி ராமமூர்த்தியை தாக்கி உள்ளார் இது குறித்து பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

Similar News