நாகர்கோவில் அருகே ஆக்கர் கடையில் தீ விபத்து

நாகர்கோவில் அருகே ஆக்கர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2023-12-27 12:49 GMT

நாகர்கோவில் அருகே ஆக்கர் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவர்  அந்த பகுதியில் ஆக்கர் கடை வைத்துள்ளார். இங்கு பழைய பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது.        இன்று அதிகாலையில் கடையில் தீ பிடித்துள்ளது.   இதை பார்த்த பொதுமக்கள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதை அடுத்து தக்கலை தீயணைப்பு நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்குள்ள வீரர்களும் சம்பவ இடத்திற்கு இணைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.         

இதை தொடர்ந்து பக்கத்தில் இருந்த குடியிருப்பு பகுதிகளையும் புகை சூழ்ந்தது. சுமார் 2 மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டாடப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News