செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் தீயில் சிக்காமல் தப்பியது.

Update: 2024-03-24 07:53 GMT

தீ விபத்து

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் அலுவலக நுழைவாயில் மேல்பகுதியில் திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருவாய் துறை காவல்துறையினர் தீ பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மேல்கூரையிலுள்ள தீயை அணைத்தனர்.

Tags:    

Similar News