ஆதரவற்றோர் சடலங்களை நல்லடக்கம் செய்த சமூக சேவகர்

Update: 2023-12-10 07:02 GMT
இறந்தோர் உடல் அடக்கம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வேலூர்மாவட்டம்,வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிமை கோராத 2 ஆண்கள் ஒரு பெண் ஆகிய 3 பேரின் சடலங்களை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர் மணிமாறன் வேலூர் பாலாற்றங்கரையில்  நல்லடக்கம் செய்தார். இவர் தொடர்ந்து மாநிலத்தில் பல மாவட்டங்களில் ஆதரவற்றோர் சடலங்களை எடுத்து சமூக சேவை நோக்கத்துடன் அடக்கம் செய்து வருகிறார்.  இதுவரையில் மணிமாறன் சமூக நோக்குடன் 2125 ஆதரவற்றோர் சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளார். இவருடன் சமூக சேவகர் ராமன் மற்றும் கணியாம்பாடி காவல்துறையினர் இணைந்து  உடல்களை முறைப்படி நல்லடக்கம் செய்து மலர்களை தூவி தீபங்களை ஏற்றி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

Similar News