தீபாவளியை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச்சந்தை

Update: 2023-11-02 13:27 GMT

சிறப்பு ஆட்டுச்சந்தை


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தாலுகாவில் திருப்புவனம் ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தில் அருகே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுசந்தை நடைபெற்றது. இந்த ஆட்டுச்சந்தைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து குறிப்பாக தென்மாவட்ங்களான மதுரை, இராமநாதபுரம், புதுகோட்டை,மேலூர் மற்றும் சிவகங்கை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 3000மேற்ப்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்திருக்கின்றனர்.

இதில்,10கிலோ எடை கொண்ட ஒரு ஆடு 9ஆயிரம் முதல்,10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ எடை கொண்ட கிடாய் 10 ஆயிரம் முதல் 27ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. சுமார்‌ 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட‌ ஆடுகள் ரூபாய் ஒரு கோடி தாண்டி விற்பனை நடைபெற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News