மாமல்லபுரம் அருகே திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு....

ஐந்து ஏக்கர் தோப்பு தரைப்புதரில், திடீரென தீப்பற்றியது. தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்து தடுத்தனர்.

Update: 2024-04-04 05:26 GMT

தீ

செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், தனியார் மாந்தோப்பு உள்ளது. ஐந்து ஏக்கர் தோப்பு தரைப்புதரில், திடீரென தீப்பற்றியது. புதுச்சேரி சாலை வரை புகை பரவியதால் , வாகனஒட்டிகளுக்கு மூச்சுத் திணறியது. பின்னர் பொதுமக்கள் இதுகுறித்து, மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு அலுவலர் இன்பராஜ் மற்றும் வீரர்கள் மேலும் தீ பரவாமல் அணைத்து தடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News