சேலம் கூட்டத்துப்பட்டி அருகே வாலிபரின் தலை துண்டித்து கொலை

Update: 2023-11-30 06:01 GMT
துண்டிக்கப்பட்ட தலை 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள கூட்டாத்துப்பட்டி பகுதியில் நேற்று இரவு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கொலை செய்யப்பட்டு தலை மட்டும் சாலையில் வீசப்பட்டு கிடந்தது . இந்த தலையை காரிப்பட்டி போலீசார் கைப்பற்றி விசாரித்து வந்தனர் . இந்த நிலையில் இன்று அதிகாலை வாலிபரின் சடலம் கூட்டத்துப்பட்டி அருகே உள்ள ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. கொலையான வாலிபர் யார் ?என தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலை தொடர்பாக சைக்கோ வாலிபர் ஒருவரை  பிடித்து வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சுந்தரி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News