கடலூரில் ஆதிராவிடர் நலக்குழு கூட்டம்
Update: 2023-12-08 06:26 GMT
ஆதிராவிடர் நலக்குழு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் மற்றும் ஆதிராவிடர் நலக்குழு கூட்டம் ஆகியவை குறித்து தொடர்புடைய துறை அலுவலர்களுடன் நடைபெற்றது . இதில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம், சார் ஆட்சியர் சிதம்பரம் சுவேதா சுமன், ஆகியோர் கலந்துகொண்டனர்.