டாட்டா ஏசி வாகனத்தில் பொதுமக்களை அழைத்துச் சென்று அதிமுகவினர் பிரச்சாரம்

செங்கல்பட்டு டாட்டா ஏசி வாகனத்தில் பொதுமக்களை அழைத்துச் சென்று அதிமுகவினர் பிரச்சாரம்.

Update: 2024-04-03 07:24 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈசூர், பூதூர், புதுப்பட்டு, கீழவலம் ,கத்தரிச்சேரி, வேடந்தாங்கல் கூட்டுச்சாலை கருங்குழி பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களை ஆதரித்து மதுராந்தகம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகத குமரவேல், மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் உள்ளிட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்..அப்பொழுது கிராமப்புறங்களில் வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் வருவதையொட்டி இரண்டு டாட்டா ஏசி வாகனத்தில் பொதுமக்களை ஏற்றிக்கொண்டு அந்தந்த பகுதிகளில் டாட்டா ஏசி வாகன மூலம் அழைத்து வரப்பட்ட பொதுமக்களை நிற்க வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.. இதனையடுத்து மற்றொரு கிராமத்திற்கு செல்லும் பொழுது இங்கிருந்த பொது மக்களை மீண்டும் டாட்டா ஏசி வாகனத்தில் அழைத்து சென்று மற்றொரு கிராமத்திலும் தேர்தல் பிரச்சார பொதுமக்களை அழைத்துச் சென்றனர்.
Tags:    

Similar News