திருச்சியில் கடவுச்சீட்டில் முறைகேடு செய்தவா் கைது

திருச்சியில் கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்ற நபரை விமான நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

Update: 2024-04-22 12:47 GMT

பைல் படம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், சனிக்கிழமை மலேசியா செல்லவிருந்த பயணிகளின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களை குடியேற்றப் பிரிவு இமிகிரேஷன் அதிகாரிகள் வழக்கமான சோதனைக்குள்படுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம் வழுதூரை சோ்ந்த அ. ஆல்பித்தின் (53) என்ற நபா், கடவுச்சீட்டில் முறைகேடு செய்து போலிஆவணங்கள் உதவியுடன் அவரது பிறந்த தேதியை (10 ஆண்டுகள் குறைத்து) மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீஸில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக திருச்சி விமான நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆல்பித்தினை கைது செய்தனா்.

Tags:    

Similar News