மயிலாடுதுறைக்கு "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி வருகை
மயிலாடுதுறைக்கு "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி வருகை;
முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி வருகை
மயிலாடுதுறைக்கு வருகை தந்த முத்தமிழ்த்தேருக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரவேற்பு மயிலாடுதுறை மாவட்டத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை நகராட்சி பகுதிக்கு "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி வருகை தந்தது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி , மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் , மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் .ராஜகுமார் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை , மாவட்ட சமூகநல அலுவலர் சுகிர்தா தேவி , மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி , சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி , குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் த மகேந்திரன், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி , மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் பொதுமக்கள் பார்வையிட்டனர்.