வங்கி ஊழியர் முதியவர் மீது கொடூர தாக்குதல் - வாலிபர்கள் அட்டகாசம் !
நாகர்கோவிலில் வங்கி ஊழியர், முதியவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-09 11:36 GMT
கன்னியாகுமரி மாவட்டம் கீழ ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (35) தனியார் வங்கி ஊழியர். சம்பவத்தன்று இரவு இவர் தட்டான் விளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஞானமிக் கேல் (65) என்பவரை இரு வாலிபர்கள் கொடூரமாக தாக்கி கொண்டு இருந்தனர். இதை பார்த்ததும் அனீஸ் அந்த வாலிபர்களை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த பீர் பாட்டில், கம்பால் அனி ஷையும் தாக்கினர். இதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது. பின் அந்த இரு வாலிபர்களும் அனிசை மிரட்டி விட்டு சென்றனர். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரும் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அனீஸ், மிக்கேல் இருவரை தாக்கியவர்கள் சஞ்சய் பிரபு (22), வீரமணி (20 ) என்று தெரிய வந்தது. இவர்கள் இருவர் மீது ஏற்கனவே கோட்டார், தேசமணி நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது.