ஆரோவில் நிர்வாகக்குழு கூட்டம் - தமிழகம், புதுச்சேரி கவர்னர்கள் பங்கேற்பு

ஆரோவில் நிர்வாகக்குழு கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி கவர்னர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-06-02 05:09 GMT

ஆரோவில் நிர்வாகக்குழு கூட்டம் 

புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில் அமைப்பின் நிர்வாகக்குழு கூட்டம் மற்றும் சர்வதேச ஆலோசனைக்குழு கூட்டம் ஆரோவில் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக கவர்னரும், ஆரோவில் நிர்வாக தலைவருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். புதுவை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆரோவில் நிர்வாக செயலாளர் ஜெயந்தி ரவி மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் ஆரோவில் வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்னதாக ஆரோ வில் வந்த இருமாநில கவர்னர்களை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாஜ் ஆகியோர் வரவேற்றனர்.
Tags:    

Similar News