குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்

கடியப்பட்டினத்தில் குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

Update: 2024-04-28 10:22 GMT
திராவிடர் கழக திண்ணை பிரச்சாரம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வுக்கான தின்னைப் பிரச்சாரம் கடியப்பட்டணம் கிராமத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்கு திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார் திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார்.

மாவட்ட பகுத்தறிவாளர்கழக தலைவர் உ.சிவதாணு முன்னிலை வகித்தனர். இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன் மற்றும் கழகத் தோழர்கள் பலரும் பங்கேற்று தந்தை பெரியாருடைய நூல்கள் பெரியாருடைய,

கொள்கைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி திராவிடர்கழகத்தின் கொள்கைகளை தெருத்தெருவாக சென்று பொதுமக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News