யானை வாகனத்தில் ஐயப்ப சுவாமி வீதி உலா

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் சுவாமி விதி உலா நடைபெற்றது

Update: 2023-12-27 08:43 GMT

யானை வாகனத்தில் ஐயப்ப சுவாமி வீதி உலா

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரில் பழைமையான ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே பக்தர்கள் பலரும் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து ஆலங்குடி ஐயப்பன் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டு பஜனை வழிபாடு, திருவிளக்கு பூஜை என பல்வேறு வழிபாடுகள் ஒரு மாதத்துற்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், இன்று ஐயப்பன் வீதி உலா உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின் மூலவர் யானை வாகனத்தில் எழுந்தருள வீதி உலா உற்சவம் மாலையில் தொடங்கி ஆலங்குடி நகரின் ஒவ்வொரு தெருவின் வழியாகவும் சென்றது. இரவு நேரத்தில் ஆலங்குடி நகரின் பிரதான பகுதிகளான வடகாடு முக்கம், அரசமரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி உலா வந்த போது நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் என சாலைகளே ஸ்தம்பிக்கும் அளவிற்கு வீதி உலா வெகு உற்சாகமாக நடைபெற்றது.

வடகாடு முக்கம் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் வீதி உலாவை வரவேற்கும் விதமாக மத்தாப்புகள் கொளுத்தி உற்சாகமாக ஐயப்பனை வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஐயப்பன் கோவில் சென்றடைந்த சுவாமி ஐயப்பனுக்கு கருப்பசாமி துள்ளல் நிகழ்வில் குருசாமி, சிறுவர்கள், மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு அருள் வந்து சாமி ஆடிய நிகழ்வு பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து ஐயப்பனை தொட்டிலில் வைத்து சிறப்பு ஆராதனை நிகழ்வுகளும், புஷ்பாஞ்சலி பூஜைகளும் வழிபாட்டு பிரார்த்தனைகளும் மிகவும் விமர்சியாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு இக்கோயிலில் அமைந்துள்ள 18 படிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு படி பூஜையும் விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடி சாமி தரிசனம் செய்தனர். வீதி உலாவிற்கு ஆலங்குடி போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News