கரூர் மாவட்ட கிராமங்களில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கரூர் மாவட்ட கிராமங்களில் பாஜக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-01 11:02 GMT

வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர் 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கடவூர் தெற்கு பகுதியில் திறந்த ஜீப் வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வேட்பாளர் செந்தில்நாதனுக்கு, பொன்னாடை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

அப்போது, அங்கு திரண்டு இருந்த பொது மக்களிடையே பேசிய செந்தில்நாதன், மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் மோடி மத்தியில் ஆட்சி அமைத்தால், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தான் பெற்று தருவேன் என உறுதி அளித்தார்.

கடவூர் தெற்கு ஒன்றியத்தில் இன்று சீத்தப்பட்டி, மோளப்பட்டி, கஸ்தூரி குரும்பபட்டி, சுக்காம்பட்டி, கடவூர், இடையப்பட்டி, பூஞ்சோலைப்பட்டி, உள்ளிட்ட கிராம பகுதிகளில் இன்று பொதுமக்களிடையே ஓட்டு வேட்டையாடினார்.

Tags:    

Similar News