வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி உடல் மீட்பு

Update: 2024-03-09 06:37 GMT
ஈரோடு கோபிசெட்டிபாளையம் நம்பியூர் பவர் ஹவுஸ் மேட்டை சேர்ந்தவர் முருகன். அவருடைய மகன் ரமேஷ் என்கிற கோபால்சாமி (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் தனது நண்பர்கள் சிலருடன் நடுப் பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாததால் ரமேஷ் மட்டும் தண்ணீரில் மூழ்கி அடித்துச் செல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை நம்பியூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் நேற்று முன்தினம் இரவு தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. அப்போது ரமேஷ் குளித்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவர் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவர் உடலை பிரேதத்தை பரிசோதனைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News