பாலம் உடைப்பு: 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

Update: 2023-11-09 11:25 GMT

பாலம் சீரமைப்பு பணியில் தொழிலாளர்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி மற்றும் செக்காரக்குடி பகுதிகளில் நேற்று இரவு பெய்த பலத்த மழை காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக தற்காலிக தரை பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தூத்துக்குடியில் இருந்து செக்காரக்குடி உள்ளிட்ட பத்து கிராமங்கள் போக்குவரத்து துண்டிப்பு செக்காரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக பல பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டது. தூத்துக்குடி மணியாச்சி பகுதியில் 63 மில்லி மீட்டர் மழையும் ஓட்டப்பிடாரம் பகுதியில் அதிகபட்சமாக 80 மில்லி மீட்டர் மழையும் பெய்தது இதன் காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தூத்துக்குடியில் இருந்து பொட்டலூரனி வழியாக செக்காரக்குடி செல்லும் புதிதாக நெடுஞ்சாலை துறை சார்பில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து க்காக அதன் அருகே அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் காக்காற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன்காரணமாக செக்காரக்குடி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளும் செக்காரக்குடி அரசு பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் செக்காரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட நான்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினா உத்தரவிட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட பாலத்தை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் மழைக்காலங்களில் இந்த தரப்பான அடித்துச் செல்லப்படுவதால் செக்காரக்குடி உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்படுவதாகவும் அங்குள்ள விவசாயிகள் செக்காரக்குடிக்கு சென்று உரம் வாங்க முடியாத நிலையில் வங்கிக்கு செல்ல முடியாத நிலையில் மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை எனவே முறையாக இந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லாதவாறு கட்டப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News