ஹோட்டல் மாடியில் எரிந்த நிலையில் ஆண் சடலம்

குமரி மருத்துவ கல்லூரி அருகே சம்பவம்

Update: 2024-01-12 08:55 GMT

எரிந்த நிலையில் ஆண் சடலம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மேற்கு வாயில் பகுதியில் டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளது. நேற்று அந்தப் பகுதியில் உள்ள ஓட்டல் மாடியில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த ஓட்டல் ஊழியர்கள் அங்கு சென்ற பார்த்தபோது அட்டைப் பெட்டி போட்டு வைத்திருந்த அறைக்குள் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் தீயில் கருகிய நிலையில் கிடந்தது.      இது குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீயில் இறந்தவர் யார் என்பது குறித்து, முதற்கட்டமாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இறந்த முதியவர் முன்தினம் மேல் சட்டை மட்டும் அணிந்து கொண்டு ஓட்டல் மாடிக்கு ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் கடந்த 8-ம் தேதி வடசேரி பகுதியில் இவர் விபத்தில் காயமடைந்து கிடந்துள்ளார். அவரை வடசேரி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பியதும் தெரிய வந்துள்ளது.
Tags:    

Similar News