கரையான்சாவடி-பூந்தமல்லி இடையே மீண்டும் பேருந்துகள் இயக்கம்

Update: 2023-12-21 03:48 GMT

பேருந்துகள் இயக்கம் 

மெட்ரோ பணிகள் முடிவடைந்ததையடுத்து கரையான்சாவடி-பூந்தமல்லி இடையே பழைய வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கரையான்சாவடி பேருந்து நிறுத்தத்திலிருந்து பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை செல்லும் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் அவ்வழியில் இயக்கப்பட்டு வந்த கரையான்சாவடி, சென்னீா்குப்பம், பூந்தமல்லி பைபாஸ், பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததையடுத்து, மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வந்த 16ஜெ, 20பி, 25, 37, 49 ஏ, 49எப், 53,54,54பி, 66, 66ஜெ உள்ளிட்ட பேருந்துகள், மீண்டும் பழைய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் நடையிழப்பு இன்றி பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News