சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து - மூதாட்டி பலி, மற்றொருவர் படுகாயம்

Update: 2023-12-10 01:55 GMT
கவிழ்ந்த லாரி 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள கோடியூர் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி கண்ணம்ம்மாள் (70). இவர் நேற்று  காலை கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு நடந்து சென்று கொண்டிருந்தார், அதே போன்று பாலக்கோடு அடுத்த சாவடியூர் கிராமத்தை சேர்ந்த ஆசிர்வாதம் (67) கூலி தொழிலாளியான இவர் தனது டி.வி.எஸ். மொபட்டில் பாலக்கோட்டிலிருந்து வெள்ளிசந்தை நோக்கி சென்று கொண்டிருந்தார், 

இந்நிலையில் ஓசூரிலிருந்து பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் மூலப்பொருட்களை ஏற்றி கொண்டு தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரி சர்க்கரை ஆலை முன்பு இருவர் மீதும் மோதி தலைப்குப்புற கவிழ்ந்தது, இதில் மூதாட்டி கண்ணம்மாள், கூலி தொழிலாளி ஆசிர்வாதம் இருவருக்கும் தலை, மார்பு, கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது, உடனடியாக அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கண்ணம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆசீர்வாதத்திற்க்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News