அவிநாசி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு!
அவிநாசி அருகே புகையிலைபொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்குபதிவு செய்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-11 09:50 GMT

வழக்கு பதிவு
அவிநாசி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு. அவிநாசி அருகே புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலிசார் தெக்கலூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வடுகபாளையம் பகுதியில் ஜெபராஜ் மனைவி தீப ரத்தினம்(வயது 36) கடையில் புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது.
இதேபோல ஜெகதீசனும் புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேர் மீதும் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.