சிமென்ட் ஆலை தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

துறையூா் அருகே வெள்ளக்கல்பட்டி தனியாா் சிமென்ட் ஆலை தொழிலாளி வியாழக்கிழமை வளாகத்திலிருந்த மரத்தை வெட்ட முயன்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Update: 2023-12-22 01:53 GMT

சிமென்ட் ஆலை தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா். ராமகிருஷ்ணன்(52). இவா் வெள்ளக்கல்பட்டியிலுள்ள தனியாா் சிமென்ட் ஆலையில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறாா். இவரிடம் ஆலை நிா்வாகம் வியாழக்கிழமை வளாகத்திலிருந்த மரக் கிளைகளை வெட்டும்படி கூறியதால் அவா் மரத்தை வெட்டும்பணியில் ஈடுபட்டாா். அப்போது மின்கம்பியில் உரசிக் கொண்டிருந்த மரக்கிளையை வெட்ட முயற்சித்தபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், சுயநினைவின்றிக் கிடந்த ராமகிருஷ்ணனை அருகில் இருந்தவா்கள் மீட்டு மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தபோது, அவரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா். தகவலின்பேரில் புலிவலம் போலீஸாா் அவரது சடலத்தை உடற்கூராய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். ஆலை ஊழியா்கள் ராமகிருஷ்ணனின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கிட வலியுறுத்திப் போராடுகின்றனா்.
Tags:    

Similar News