திருச்சியில் ஆட்டோவில் இறந்து கிடந்த சமையல்காரர்…
திருச்சியில் ஆட்டோவில் இறந்து கிடந்த சமையல்காரர் உடலை கோட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை;
Update: 2024-03-10 18:16 GMT
உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை நேருஜி நகரை சேர்ந்தவர் கோபி (70) . இவர் சமையல்காரர் ஆக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் மதுரை ரோடு நத்தர்ஷா பள்ளிவாசல் அருகில் ஒரு ஆட்டோவில் இறந்து கிடந்துள்ளார். தகவல் அறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.