மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ஆணை வழங்கிய அமைச்சர்

மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ், பயனாளிகளுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆணை வழங்கினார்.

Update: 2023-12-22 11:25 GMT

ஆணைகளை வழங்கிய அமைச்சர்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி, ராஜசங்கீதா திருமண மண்டபத்தில், "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின்கீழ், மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று ( பார்வையிட்டு, "மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட மனுதாரருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் பட்டா மாறுதலுக்கான ஆணையினை வழங்கினார்.

உடன் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.சின்னத்துரை அவர்கள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.மு.செய்யது முகம்மது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, பேரூராட்சித் தலைவர் .முருகேசன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் திரு.த.சந்திரசேகரன், அட்மா கமிட்டித் தலைவர் திரு.முத்துகிருஷ்ணன், பேரூராட்சி துணைத்தலைவர் திரு.நைனா முகமது, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News