பிரசித்தி பெற்ற திருக்கோஷ்டியூரில் சித்திரைத் திருவிழா துவக்கம்

பிரசித்தி பெற்ற திருக்கோஷ்டியூரில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

Update: 2024-04-14 15:38 GMT

 ஶ்ரீ செளமியநாராயண பெருமாள் காேயிலில்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஶ்ரீ செளமியநாராயண பெருமாள் காேயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான உலகப்புகழ் பெற்ற இக்கோயிலில் சித்திரை உத்ஸவம் 11 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இவ்விழாவை முன்னிட்டு இன்று உற்சவர் பெருமாள் மற்றும் தேவியர்கள் கல்யாண மண்டபம் எழுந்தருளினார்கள். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ஆலயத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்பு கொடி மரத்திற்கு தர்ப்பைபுல் மற்றும் மாஇலையால் அலங்கரிக்கப்பட்டு , பால், தயிர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று பெருமாளுக்கும் கொடிமரத்திற்கும் தீபாரதனைகள் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி, தாயரை வழிபட்டனா்.
Tags:    

Similar News