சேலத்தில் இரு தரப்பினர் மோதல்: 7பேர் கைது

சேலத்தில் இரு தரப்பினர் மோதல் சம்பவத்தில் 7பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-29 11:25 GMT

கோப்பு படம் 

சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் சண்முகம் (வயது 64). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் தரப்புக்கும் நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதில் காயம் அடைந்த இரு தரப்பினரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பை சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளனர்.

Tags:    

Similar News