பரமத்தி வேலூரில் ரூ.45 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம்.

பரமத்தி வேலூர் தேசிய ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.45 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனையானது.

Update: 2024-05-15 13:50 GMT
விற்பனைக்கு வந்த தேங்காய்

பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 696 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.26.29-க்கும், குறைந்த பட்சமாக ரூ.23.17-க்கும், சராசரியாக ரூ.25.19-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.90 ஆயிரத்து 940-க்கு வர்த்தகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு ஆயிரத்து 741-கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.26.60-க்கும், குறைந்தபட்சமாக ரூ23.19- க்கும், சராசரியாக ரூ.‌25.29-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 45 ஆயிரத்து 380- க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags:    

Similar News