இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்.
இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்;
Update: 2023-10-28 01:39 GMT
பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு குருதி பரிமாற்று குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் சார்பாக தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு, அதிக முறை ரத்ததான முகாம்களை நடத்தி கொடுத்தவர்கள் மற்றும் 140 இரத்ததான முகாம் அமைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன், கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.