போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

புதுக்கோட்டை மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.

Update: 2024-02-17 09:12 GMT

போட்டியில் வென்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்பட்ட பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டியில் பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட அளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பேச்சுப் போட்டியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியின் மாணவி ச. ஸ்ரீஹாசினி முதல் பரிசைப் பெற்றார். அவருக்கு ரூ. 10 ஆயிரம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவியை பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி பாராட்டினார். அப்போது துணை முதல்வர் குமாரவேல், தமிழாசிரியை சுமதி ஆகியோரும் உடனிருந்தனர். மேலும், மச்சுவாடியிலுள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியின் மாணவி சா.சபீனா பேகம் முதலிடம் பெற்றார்.அவருக்கும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. பரிசுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. மஞ்சுளா வழங்கினார். அப்போது பள்ளியின் முதல்வர் பெ. சிவப்பிரகாசம், தமிழாசிரியை இளவரசி ஆகியோர் இருந்தனர்.
Tags:    

Similar News