நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் !
திருப்பூர் திமுக கட்சி மாவட்ட அலுவலகத்தில் திருப்பூர் பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர், திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தன் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-02 07:38 GMT
ஆலோசனை கூட்டம்
திருப்பூர் வடக்கு மாவட்ட கழக அலுவலகம், முரசொலி மாறன் வளாகத்தில் இந்தியா கூட்டணியின் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி பார்வையாளர் சச்சிதானந்தம் கழக நெசவாளர் அணி மாநில செயலாளர் தலைமையில்,நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,வடக்கு மாவட்ட கழக செயலாளர் செல்வராஜ்MLA , வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் , தெற்கு மாநகர செயலாளர் டி கே டி முநாகராசன் , வடக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் திராவிட மணி , தெற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் , மாவட்ட மாநகர நிர்வாகிகளும், பகுதி வட்ட கழக செயலாளர்களும்,BLA2 பொறுப்பாளர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.