கள்ளிக்குடி காவல் நிலையத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர்கள் வளைகாப்பு

மதுரை கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தாய் தந்தையை இழந்த கர்ப்பிணி பெண்ணுக்கு காவலர்கள் நடத்திய வளைகாப்பு.;

Update: 2024-05-30 15:26 GMT

காவலர்கள் நடத்திய வளைகாப்பு நிகழ்ச்சி

 மதுரை திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தரவு நுழைவு உதவியாளராக பணிபுரியும் சங்கீதா இவரது தந்தை ஜோதிகரன் மதுரை திருநகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இந்த நிலையில் ஐடியில் பணிபுரியும் ராஜா பிரபு என்பருடன் திருமணம் நடந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கீதாவின் தாயார் மல்லிகாவும் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். 

Advertisement

  தற்போது சங்கீதா 7 மாதம் கர்ப்பமான நிலையில் வளகாப்பு நிகழ்ச்சி நடத்த பெற்றோர்கள் இல்லையே என கவலைப்பட்டுக் கொண்டிருந்ததை அறிந்த காவலர்கள் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் வைத்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர். இந்தில் ஆய்வாளர் லட்சுமி லதா, சார்பாய்வாளர் ஐந்து ஜெயக்குமார் மற்றும் சக காவலர்கள் பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தேன். 

  வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த பெற்றோர்கள் இல்லையே என நினைத்துக் கொண்டிருந்த கர்ப்பிணிக்கு காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News