அருமனை அருகே மாமியாரை தாக்கிய மருமகள் கைது

அருமனை அருகே மாமியாரை கட்டையால் தாக்கிய மருமகள் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-04 08:33 GMT

பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள மஞ்சாலுமூடு தோட்டத்து விளை பகுதியைச் சேர்ந்தவர் யசோதா. இவர் - கணவரை பிரிந்து சிதறால் பகுதியில் வசித்து வருகிறார். யசோதா தனது மகனின் பிள்ளை களை பார்ப்பதற்காக மஞ்சாலுமூடுக்கு சென்றார். அப்போது மருமகள் அஸ்வினி யசோதாவை திட் டியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் யசோதாவை - அஸ்வினி அருகில் கிடந்த கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறதுஇதில் படுகாயமடைந்த யசோதா சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்தநிலையில் யசோதாவை தாக்கிய அஸ்வினியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News