ஏ.ஐ.டி.யு.சி சார்பில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2023-12-11 11:49 GMT

 திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஏ ஐ டி யு சி உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளனம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்ய வழிமுறைகளை எளிமையாக்கிட வேண்டும், ஓய்வு ஊதியத்தை மாதம் 3 ஆயிரமாக உயர்த்திட வழங்க வேண்டும், இயற்கை மரணத்துக்கு வழங்கி வரும் உதவித்தொகையினை 5000 உயர்த்தி விபத்து மரணம் உதவித்தொகையினை 5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் பாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பட்டத்தில் உடல் உழைப்பு தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News