பொள்ளாச்சியில் 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களாக டெபாசிட் தொகையை செலுத்திய வேட்பாளர்..

பொள்ளாச்சியில் வேட்பு மனு தாக்கலுக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான டெபாசிட் பணத்தை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்த பகுஜான் சமாஜ் கட்சியின் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன்.

Update: 2024-03-25 11:51 GMT
நடைபெற உள்ள மக்களவை தொகுதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்துப் போட்டியிடப்படுகிறது. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக உடுமலையை சேர்ந்த பெஞ்சமின் கிருபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை அழித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். வேட்பு மனு தாக்கலுக்கு உண்டான டெபாசிட் பணத்தை செலுத்துவதற்காக 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களை டெபாசிட் பணமாக செலுத்தினார். இதுகுறித்து வேட்பாளர் கூறுகையில் பத்து ரூபாய் நாணயத்தை கடைகளில் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களிலும் வாங்குவது கிடையாது. இதனால் பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து கடைகளிலும் வாங்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் நூதன முறையில் மனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News